Our Feeds


Wednesday, February 22, 2023

Anonymous

மனைவியை வரவழைத்துத் தாருங்கள் - அதுவரை பிள்ளைகளை பாருங்கள் - வெளிநாட்டு வேலைவாய்பு பணியகத்தில் 3 பிள்ளைகளை விட்டுச் சென்ற தந்தை!

 



தங்காலையில் உள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அலுவலகத்திற்கு மூன்று பிள்ளைகளுடன் சென்ற தந்தை ஒருவர் மனைவியை அழைத்து வருமாறு அதிகாரிகளிடம் கோரி மூன்று பிள்ளைகளையும் அலுவலகத்திற்கு அருகில் விட்டு விட்டுச் சென்றதாக தங்காலை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.


அம்பலாங்கொடை பகுதியைச் குறித்த நபர் (பிள்ளைகளின் தந்தை), இந்த மூன்று குழந்தைகளுடன் அலுவலகத்திற்கு சென்று, மூன்று குழந்தைகளையும் அங்கேயே விட்டுவிட்டு சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


இந்நிலையில்,தந்தையால் கைவிடப்பட்ட ஒரு வயது, ஆறு மற்றும் பத்து வயதுடைய மூன்று பிள்ளைகளும் பொலிஸாரால் பொறுப்பேற்றுள்ளதாக தங்காலை தலைமையக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


குறித்த மூன்று பிள்ளைகளின் தாய் கடந்த வருடம் ஜூலை மாதம் தொழில் நிமித்தம் வெளிநாடு சென்றிருந்த நிலையில், வெளிநாடு சென்றுள்ள தனது மனைவியை அழைத்து வருமாறு கோரி அவரது கணவர் தங்காலை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் இதற்கு முன்னர் முறைப்பாடு செய்திருந்தார்.


முறைப்பாடு தொடர்பில் விசாரணை நடத்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »