பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழகத்தை மீள ஆரம்பிக்கும் போது, கல்வி நடவடிக்கைகளுக்காக மாணவர்களை அனுமதிக்கும் போது மாணவர், பாதுகாவலருடன் வருகைதருவது கட்டாயம் என பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் நெலுவே சுமனவன்ச தேரர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு டிசம்பர் 19ஆம் திகதி முதல் பல்கலைக்கழகத்தை தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
பின்னர், இம்மாதம் 27ஆம் திகதி பல்கலைக்கழகத்தை மீள திறக்க நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
அதன்படி முதலாம் ஆண்டு மாணவர்களே முதலில் பல்கலைக்கழகத்திற்கு உள்வாங்கப்படுவார்கள் என பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் நெலுவே சுமனவன்ச மேலும் தெரிவித்துள்ளார்.
தற்போதைய சூழ்நிலையில் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தற்காலிகமாக கலைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.