துருக்கியில் கடந்த 6-ம் திகதி அதிகாலை சிரியா நாட்டின் எல்லையோரம் அமைந்துள்ள காசியான்டெப் நகரை மையமாக கொண்டு அதிபயங்கர நிலநடுக்கம் தாக்கியது. ரிக்டர் அளவில் 7.8 புள்ளிகளாக பதிவான இந்த நிலநடுக்கம் ஒட்டுமொத்த துருக்கியையும் உலுக்கியது.
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட சிரியாவுக்கு தங்களின் ஆதரவை தெரிவிக்கும் வகையில் எகிப்து வெளியுறவுத்துறை அமைச்சர் சமே ஷோக்ரி உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.
எகிப்து நாட்டின் அமைச்சர் ஒருவர் கடந்த 10 ஆண்டுகளில் சிரியா செல்வது இதுவே முதல் முறையாகும்.
சிரியாவை தொடர்ந்து அவர் துருக்கிக்கும் விஜயம் செல்லவுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எகிப்து வெளியுறவுத்துறை அமைச்சரின் வருகை, நெருக்கடி காலங்களில் பிராந்திய ஒத்துழைப்பு மற்றும் ஒற்றுமையின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.