Our Feeds


Monday, January 16, 2023

SHAHNI RAMEES

BREAKING: உகாண்டா தேவாலயத்தில் குண்டுவெடிப்பு- 10 பேர் உயிரிழப்பு...!

 

உகாண்டா எல்லையில் உள்ள கிழக்கு கொங்கோ பகுதியில் காசின்டி நகரில் உள்ள ஸ்பாக் தேவாலயத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பொதுமக்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த போது அங்கு திடீரென பலத்த சத்தத்துடன் குண்டு வெடித்தது. இந்த குண்டு வெடிப்பில் 10 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தோடு, 15 பேர் படுகாயம் அடைந்தனர்.

குண்டு வெடித்த சத்தம் கேட்டு அருகில் குடியிருப்பில் இருந்தவர்கள் வந்து பார்த்து மீட்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் மீட்பு படையினருடன் இடிபாடுகளில் சிக்கி இருந்தவர்களை மீட்டனர்.



உகாண்டாவின் பயங்கரவாத குழுவான நேச ஜனநாயக படைகளால் (ஏ.டி.எப்.) இந்த தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கலாம். பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் இருந்த போதிலும் இந்த வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.



இதன் பின்னணியில் ஏ.டி.எப். குழு தான் ஈடுபட்டு இருக்கும் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து மேலும் விசாரணை நடந்து வருகிறது என்று தெரிவித்தார்.

ஆனாலும் இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு எந்த பயங்கரவாத அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது.



குண்டு வெடிப்பு சம்பவத்தையடுத்து உகாண்டா இஹராணுவம் எல்லையில் பாதுகாப்பை பலப்படுத்தி தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »