Our Feeds


Thursday, January 12, 2023

Anonymous

குழந்தைகளுக்கு டெங்கு அறிகுறி இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லுங்கள் - லேடி ரிஜ்வே சிறுவர் மருத்துவமனை!

 



டெங்கு நோயின் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக பிள்ளைகளை வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் சிறுவர் வைத்திய நிபுணர் வைத்தியர் தீபால் பெரேரா பெற்றோர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

தாமதமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டால் ஆபத்தான பிரச்சினைகளை சந்திக்க நேரிடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குழந்தைகளை குறைந்த பட்சம் மருத்துவமனைகளின் வெளிநோயாளர் பிரிவுகளுக்காவது அழைத்துச் சென்று மருத்துவ ஆலோசனைகளைப் பெறுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

டெங்கு நோயினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், டெங்கு நோயினால் பாதிக்கப்பட்ட சுமார் நாற்பது சிறுவர்கள் தற்போது கொழும்பு லேடி ரிஜ்வே வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தீபால் பெரேரா மேலும் தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »