Our Feeds


Thursday, January 12, 2023

Anonymous

பொதுமக்களுக்கு எச்சரிக்கை - டெங்கு மற்றும் எலிக் காய்ச்சல் பதிவாகும் வீதம் அதிகரிப்பு

 



இலங்கையில், டெங்கு மற்றும் எலிக் காய்ச்சல் நோயாளர்கள் பதிவாகும் வீதம் அதிகரித்துள்ளதாக உடலியல் நோய் விசேட வைத்தியர்கள் சங்கம், எச்சரிக்கை விடுத்துள்ளது.


டெங்கு மற்றும் எலிக் காய்ச்சல் தொற்றிய நோயாளர்கள், உரிய மருந்துவ பரிந்துரை இன்றி, மருந்துகளைக் கொள்வனவு செய்யும் போக்கு அதிகரிப்பதைக் காணக்கூடியதாக உள்ளதென்றும் அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.

நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு, இந்த நிலைமையும் ஒரு காரணமாகும் என கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில், அந்த சங்கத்தின் உப தலைவர், தென்கொழும்பு போதனா வைத்தியசாலையின் உடலியல் நோய் விசேட வைத்தியர் நந்தன திக்மாதுகொட தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »