சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்கு கொண்டு செல்லப்படவிருந்த சுமார் 450 கோடி ரூபா பெறுமதியான சிவப்பு நிற மாணிக்கக்கல்லை நேற்று (ஜன 11) மதவாச்சி பகுதியில் வைத்து கைப்பற்றியதாக மதவாச்சி பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த மாணிக்கக் கல்லுடன் இரு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டதுடன் கெப் வாகனத்தையும் கைப்பற்றியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் கெபிதிகொல்லேவ முகாமிலிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் மதவாச்சி குருகந்தேகம பிரதேசத்தில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.