ஹபரணையில் ரயிலில் மோதி குறைந்தது மூன்று காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.
மட்டக்களப்பு - திருகோணமலை - கொழும்பு ரயில் பாதையில் ஹபரணை மற்றும் கல் ஓயா நிலையங்களுக்கு இடையில் ஹடரெஸ் கொடுவ பிரதேசத்திற்கு அருகில் நேற்றிரவு அதிவேகமாக பயணித்த ரயிலில் மோதுண்டு மூன்று யானைகள் உயிரிழந்துள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
ரயில் இன்று அதிகாலை விபத்தின் பின்னர் தடம் புரண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு ரயில் நிலையத்தில் இருந்து அதிகாலை 1.30 மணியளவில் புறப்பட்ட ரயில், ஹடரெஸ் கொடுவ பிரதேசத்திற்கு அருகில் 5.05 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இச்சம்பவத்தைத் தொடர்ந்து இயந்திரம் மற்றும் மற்றொரு பெட்டி தடம் புரண்டுள்ளன.
இதன் காரணமாக மட்டக்களப்பு-கொழும்பு ரயில் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும், தண்டவாளத்தை சீர்செய்யும் பணிகள் தற்போது இடம்பெற்று வருவதாகவும் ரயில்வே திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.