மிதிகம - பாதகம பிரதேசத்தில் 24 வயதுடைய இளைஞன் ஒருவர் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு நேற்று (11) இரவு கொலை செய்யப்பட்டுள்ளார்.
கொலைக்கான காரணம் தெரியவராத நிலையில், சந்தேகநபர்கள் பலர் உள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சடலம் பொலிஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன், நீதவான் விசாரணை இன்று (12) நடைபெறவுள்ளது.
சந்தேகநபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை மிதிகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.