அவுஸ்திரேலியாவின் சிட்டி நகரில் நடைபெற்று வரும் உலகக் கிண்ண 20/20 போட்டிகளை பார்வையிட சென்ற இலங்கை கண்டியை சேர்ந்த முஸ்லிம் இளைஞர்கள் இலங்கைக்கு சுற்றுலா வருமாறு கோரி பதாதைகளை ஏந்தியிருந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.
நாட்டின் வளர்ச்சிக்கு அன்று முதல் இன்று வரை முஸ்லிம்கள் என்றும் துணையிருப்பவர்கள் என்று இணையவாசிகள் மகிழ்ச்சியை வெளியிட்டு வருவது குறிப்பிடத் தக்கதாகும்.
ஆரம்பமாக, முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் ஹிதாயத் சத்தார் குறித்த புகைப்படங்களை தமது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்திருந்தமை குறிப்பிடத் தக்கதாகும்.