நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றம் கூடுகின்ற தினங்களிலும் மற்றும் வரவு செலவுத்திட்ட விவாதம் இடம்பெறுகின்ற காலப்பகுதியிலும் வெளிநாடுகளுக்கு செல்ல கூடாது என பிரதமர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இதனூடாக, அவசர மருத்துவ தேவைக்களுக்கு அல்லது அரசின் அவசர பணிகளுக்கான சந்தர்ப்பங்கள் தவிர்ந்த, அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் அரசாங்க கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.