Our Feeds


Monday, October 24, 2022

SHAHNI RAMEES

#PHOTOS: முஷர்ரப் எம்பிக்கு பொத்துவில் மக்களின் நன்றி..! - 360 குடும்பங்களுக்கு நண்மை..!

 


பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ. SMM முஷாரப் அவர்களின் வழிகாட்டலில் முன்னெடுக்கப்பட்டு வரும் குடிநீர் தீர்வுத் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட முதலாவது மற்றும் இரண்டாவது குடிநீர் விநியோகத் தொகுதிகளை மக்களுக்கு கையளிக்கும் நிகழ்வு இன்று (24.10.2022) செங்காமம் மற்றும் ஹிதாயாபுரம் ஆகிய இடங்களில் இடம்பெற்றது.


பொத்துவிலில் மிக நீண்ட காலமாக குடிநீர்த் தட்டுப்பாடு நிலவும் பிரதேசங்களான செங்காமம் மற்றும் ஹிதாயாபுரம் மக்களின் குடிநீர்த் தேவையை நிவர்த்தி செய்யும் பொருட்டு அங்கு ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்பட்டு, நீர்த்தாங்கிகளில் சேமிக்கப்படும் குடிநீரை நிலக்கீழ் குழாய்வழியாக  மக்களின் வீடுகளுக்கு நேரடியாகக் கொண்டு செல்லும் இத்தொகுதிகள் ஒவ்வொன்றும் நாளொன்றுக்கு 500 குடும்பங்களுக்குத் தேவையான குடிநீரை உற்பத்தி செய்யும் திறன் கொண்டவை. 


பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ. SMM முஷாரப் அவர்களது வழிகாட்டலின் கீழ், குவைத் நாட்டின் அல்-நஜாத் தொண்டு நிறுவனத்தின் நிதியுதவியில், அந்நூர் நலன்புரிச் சங்கத்தினால் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப் படுகிறது. 
கடந்த 2021-06-16 அன்று ஆரம்பிக்கப்பட்ட இச்செயற்றிட்டங்கள் கொரோனா இடர், கட்டுமானப் பொருட்களின் விலையேற்றம், தட்டுப்பாடு என அனைத்தையும்  கடந்து இன்று பூர்த்தியடைந்துள்ளது. அல்ஹம்துலில்லாஹ்! 
இக்குடிநீர் விநியோகத் தொகுதிகளை மக்கள் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வுகள் பாராளுமன்ற உறுப்பினரின் தலைமையில் இன்று (2022-10-24) இடம்பெற்றது. 

இன்றைய நிகழ்வில் குவைத் அல்-நஜாத் தொண்டு நிறுவனத்தின் பணிப்பாளர்  சமீஹ் ஷாகிர் அப்துல் அஸீஸ் அவர்கள், செயற்றிட்ட முகாமையாளரான Eng. பஹத் இஹாப் முஹம்மத் அல்-தப்பூஸ், 
அந்தூர் நலன்புரிச் சங்கத்தின் தலைவர் எஸ்.எம் அலியார், பணிப்பாளர் Dr. ரிப்கி ரம்சான், அமைப்பின் ஏனைய முக்கியஸ்தர்கள்,


பொத்துவில் பிரதேச செயலாளர் எம். ஐ. பிர்னாஸ், பொத்துவில் பிரதேச சபைத் தவிசாளர் எம்.எச் அப்துர் ரஹீம், பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்புச் செயலாளர் வை. எல். நியாஸ், பிரதேச சபையின் உறுப்பினர்கள், திட்ட அமுலாக்கல் குழு அங்கத்தவர்கள், பொதுமக்கள், பயனாளிகள் என பலரும் கலந்து கொண்டனர்.


மூன்றாவது தொகுதி (பொத்துவில் பொலிஸ் நிலையத்தில் அமைக்கப்பட்டது) ஏற்கனவே 2021-12-05 அன்று பூர்த்திசெய்யப்பட்டு மக்கள் பாவனைக்கு வழங்கப்பட்டது. 


#team_muszhaaraff #தீர்வே_விடிவு
















Subscribe to this Blog via Email :
Previous
Next Post »