Our Feeds


Sunday, October 30, 2022

Anonymous

கொழும்பு மாவட்ட பள்ளிவாயல்கள் கூட்டமைப்பின் (CDMF) புதிய தலைவராக சட்டத்தரணி ஷிராஸ் நூர்தீன் ஏகமனதாக தேர்வு!

 



சிரேஷ்ட சட்டத்தரணி ஷிராஸ் நூர்தீன் அவர்கள் கொழும்பு மாவட்ட பள்ளிவாயல்கள் கூட்டமைப்பின் (CDMF) தலைவராக இன்று ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


தெஹிவலை பெரிய பள்ளிவாயலில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் கொழும்பு நகரக் கிளையின் மேற்பார்வையில் இடம்பெற்ற நிர்வாகத் தெரிவிலேயே சட்டத்தரணி ஷிராஸ் நூர்தீன் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


கொழும்பு மாவட்ட பள்ளிவாயல்கள் கூட்டமைப்பு என்பது கொழும்பு நகரில் உள்ள 180 பள்ளிவாயல்களை உள்ளடக்கிய மத்திய அமைப்பாகும். இது 12 மண்டல கூட்டமைப்புகளின் ஒருங்கிணைந்த அமைப்பாக செயல்பட்டு வருகிறது.


2014 இல் உருவாக்கப்பட்ட கொழும்பு மாவட்ட பள்ளிவாயல்கள் கூட்டமைப்பின் (CDMF) நிறுவனரான சிரேஷ்ட சட்டத்தரணி ஷிராஸ் நூர்தீன் அவர்கள் அதன் ஆரம்ப செயலாளராகவும் செயல்பட்டவராவார்.


கொழும்பு, புதுக்கடை பள்ளிவாயல்கள் கூட்டமைப்பை சேர்ந்த அப்துல் கரீம் அவர்கள் கொழும்பு மாவட்ட பள்ளிவாயல்கள் கூட்டமைப்பின் புதிய நிர்வாகத்தின் பொதுச் செயலாளராகவும், கொலன்னாவ பள்ளிவாயல்கள் கூட்டமைப்பை சேர்ந்த பெரோஸ் முஹம்மத் அவர்கள் பொருளாளராகவும் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டார்கள்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »