உலகக்கிண்ண இருபதுக்கு 20 தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில் இந்திய அணி 4 விக்கட்டுக்களினால் த்ரில் வெற்றி பெற்றுள்ளது.
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 8 விக்கட்டினை இழந்து 159 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதனையடுத்து, பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கட்டினை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.