நிதி மோசடி குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலி, ஹெலிகொப்டர்கள் மூலம் கதிர்காமத்திற்கு புனித யாத்திரை சென்றதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
அத்தகைய பயணத்திற்காக அவர் ஒரு மில்லியன் ரூபாய் செலவிட்டதாக வட்டாரங்கள் தெரிவித்தன.
மேலும், குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளில், திலினி பிரியமாலியின் அலுவலகம் இருந்த உலக வர்த்தக மையத்தின் 34வது மாடிக்கான வாடகை முறையாக செலுத்தப்படவில்லை என மேலும் தெரியவந்துள்ளது.