இங்கிலாந்தில் பிரதமர் பதவிக்கு இந்திய வம்வாவளி ஒருவர் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். அந்நாட்டில் கிறிஸ்தவ மதம் பிரதானமாக இருந்தாலும் அரச தலைவராக இந்து மதத்தை சேர்ந்தவர் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளார்.
ஆனால் இரட்டை குடியுரிமை உடையவர்களை (பஸில்) எமது நாடு விரட்டியடிக்கின்றது. இப்படியான அரசியலமைப்பு (22ஆவது) திருத்தங்களை கொண்டுவந்தவர்களுக்கு இங்கிலாந்து சம்பவம் சிறந்த, பதிலடியாக – அறையாக அமைந்துள்ளது.
இவ்வாறு கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது கருத்து வெளியிட்டார் மொட்டு கட்சி செயலாளர் சாகர காரியவசம்.