Our Feeds


Friday, October 28, 2022

Anonymous

இரட்டை குடியுரிமை கொண்ட எம்.பிக்கள் பதவி விலக வேண்டும் – ஹக்கீம் வலியுறுத்து...

 

 

இரட்டை பிரஜாவுரிமையுள்ளோர் பாராளுமன்றத்தில் இருப்பின் அரசியலமைப்பின் பிரகாரம் அவர்கள் தமது பதவிகளை இராஜினாமா செய்ய வேண்டுமென முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

நாட்டின் சகல பிரஜைகளும் நாட்டின் அரசியலமைப்புக்கு உட்பட்டவர்களெனவும், இரட்டை பிரஜாவுரிமை பெற்றவர்கள் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வகிக்க முடியாதென அரசியலமைப்பின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால், அவ்வாறானவர்களுக்கு பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தகுதி இல்லையெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார் .

இரட்டைக் குடியுரிமை உள்ளவர்கள் தமது கட்சியால் பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தப் படவில்லையெனவும், ஏனைய கட்சிகளில் இவ்வாறானவர்கள் இருக்கின்றார்களா என்பது தனக்குத் தெரியாதெனவும் அவர் தெரிவித்தார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »