Our Feeds


Saturday, October 29, 2022

SHAHNI RAMEES

சாரதி அனுமதிப்பத்திரம் குறித்து வெளியான அறிவிப்பு..!

 

சாரதி அனுமதிப் பத்திரம் அச்சடிக்கும் பணி அடுத்த வாரம் ஆரம்பிக்கப்ப்டும் என மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

அண்மைக் காலமாக பொருட்களுக்கு ஏற்பட்ட தட்டுப்பாடு காரணமாக திணைக்களம் பெருமளவிலான சாரதி அனுமதிப் பத்திரங்களை அச்சிடுவதை இடைநிறுத்தி, குறைந்த எண்ணிக்கையிலான பத்திரங்களை மாத்திரமே வழங்கி வருகிறது.

அடுத்த வாரம் ஜேர்மனியில் இருந்து 500,000 அட்டைகளை பெற்றுக்கொள்ளவுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.

தற்போது 600,000 சாரதி அனுமதிப்பத்திரங்கள் அச்சிடப்பட்டு விநியோகிக்கப்பட உள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த வீரசிங்க உறுதிப்படுத்தியுள்ளார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »