Our Feeds


Sunday, October 30, 2022

SHAHNI RAMEES

உயிர் பாதுகாப்பு மருந்துகளுக்கு தட்டுப்பாடு இல்லை..!




நாடளாவிய ரீதியாக மருந்து தட்டுப்பாடு

காணப்படுகின்ற போதிலும் உயிர் பாதுகாப்பு மருந்துகளுக்கு தட்டுப்பாடு இல்லை என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.


கண்டியில் இன்று ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.


அத்தியாவசியமான 384 மருந்து வகைகளில் சில மருந்துகளுக்கும் சத்திர சிகிச்சைகளுக்காக பயன்படுத்தப்படும் சில உபகரணங்களுக்கும் தட்டுப்பாடு நிலவுவதாகவும் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.


தற்போது சில மருந்துகளுக்கு தட்டுப்பாடு காணப்படுகின்ற போதிலும் அவற்றை எதிர்வரும் ஒன்றரை மாதங்களில் பெற்றுக்கொள்ள முடியும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »