மாத்தறை – திஹகொட பகுதியில் பொலிஸாரின்
துப்பாக்கி தவறுதலாக இயங்கியதில் பாடசாலை மாணவர் ஒருவர் காயமடைந்த சம்பவம் தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
மாத்தறை மாவட்டத்தின் மனித உரிமை ஆணைக்குழுவின் குழுவொன்று இன்று (29) குறித்த பகுதிக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக கூறப்படுகிறது.