பெருந்தோட்ட பகுதிகளில் வாழும் மக்களின் பிரச்சினைகள் குறித்து ஆராய்வதற்கு செயலணி ஒன்றை அமைக்கும் தனது கோரிக்கைக்கு, ஜனாதிபதி கொள்கை ரீதியில் இணங்கியதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (ஒக்.24) இடம்பெற்ற தீபாவளி நிகழ்வில் கலந்துகொண்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாடியமை தொடர்பில், மனோ கணேசன் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டு இதனைக் கூறியுள்ளார்.
அத்துடன், எதிர்வரும் பொங்கல் தினத்தில் மற்றொரு தொகுதி தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய நடவடிக்கை எடுப்பதாக தன்னிடம் ஜனாதிபதி உறுதி அளித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.