ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் 3வது தொகுதிக்கூட்டம், கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்சவின் பங்கேற்புடன் புத்தளம், ஆராய்ச்சிக்கட்டுவில் நாளை நடைபெறவுள்ளது.
'சாம்பல் மேட்டிலிருந்து பீனிக்ஸ் பறவைபோல மீண்டெழுவோம்’ எனும் தொனிப்பொருளின்கீழ் குறித்த கூட்டம் நடைபெறவுள்ளது.
மொட்டு கட்சியின் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்தவினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இக்கூட்டத்தில் நாமல் ராஜபக்ச உள்ளிட்ட மொட்டு கட்சி முக்கியஸ்தர்கள் பங்கேற்கவுள்ளனர்.