Our Feeds


Friday, October 21, 2022

Anonymous

வாகன விபத்தில் பெண்ணும் மகனும் பலி..!

 

 

குருணாகல் மாவட்டத்தின் வலக்கும்புர பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரு பெண்ணும் அவரின் மகனும் உயிரிழந்துள்ளனர்.

42 வயதான ஒரு பெண்ணும் 18 வயதான அவரின் மகனுமே உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.




கொழும்பு – குருணாகல் வீதியில் டிப்பர் லொறி ஒன்றும், முச்சக்கர வாகனம் ஒன்றும் மோதிக்கொண்டதால் இவர்கள் உயிரிழந்துள்ளனர்.

முச்சக்கர வாகனத்தை செலுத்திய பெண்ணின் கணவரும், மற்றொரு மகனும் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். டிப்பர் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »