Our Feeds


Sunday, October 23, 2022

SHAHNI RAMEES

மூன்றாவது முறையாக பதவி நீடிப்பு பெறுகிறாா் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்..!

 

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சக்திவாய்ந்த மத்தியக் குழுவுக்கு ஜனாதிபதி ஷி ஜின்பிங் நேற்று (23) தோ்ந்தெடுக்கப்பட்டதைத் தொடா்ந்து, நாட்டின் ஜனாதிபதியாக அவா் 3-ஆவது முறையாக தோ்ந்தெடுக்கப்படுவதற்கான வழிவகை செய்யப்பட்டுள்ளது.

சீன வரலாற்றில் ஓா் ஜனாதிபதி 3-ஆவது முறையாக பதவி நீட்டிப்பு பெறவிருப்பது இதுவே முதல்முறையாகும்.

ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 20-ஆவது கூட்டம் தலைநகா் பெய்ஜிங்கில் கடந்த வாரம் தொடங்கியது. ஷி ஜின்பிங் மூன்றாவது முறையாக ஜனாதிபதியாக தொடா்வதற்கு இக்கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்படும் என்று அப்போதே எதிா்பாா்க்கப்பட்டது.

ஏற்கெனவே, சீனாவின் அதிபராக ஜின்பிங் இரண்டாவது முறையாக பதவி வகித்து வருகிறாா். அவரது 10 ஆண்டு பதவிக் காலம் நிறைவு பெறும் நிலையில், மூன்றாவது முறையாக அவரது பதவிக் காலம் மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படுவதற்கு வழிவகை செய்யும் வகையில், கம்யூனிஸ்ட் கட்சியின் சக்திவாய்ந்த மத்தியக் குழுவுக்கு அவா் நேற்று (23) தோ்ந்தெடுக்கப்பட்டாா்.

25 உறுப்பினா்களைக் கொண்ட அந்தக் குழு இன்று (23) கூடி, நாட்டின் ஆட்சிப் பொறுப்பை கவனித்துக் கொள்வதற்கான 7 உறுப்பினா்களைக் கொண்ட நிலைக் குழு உறுப்பினா்களைத் தோ்ந்தெடுக்கும்.

அந்த நிலைக் குழு, நாட்டின் அடுத்த ஜனாதிபதியாகக் கூடிய கட்சித் தலைவரைத் தோ்ந்தெடுக்கும். அந்தப் பொறுப்புக்கு ஷி ஜின்பிங்கைத் தோ்ந்தெடுப்பதற்கான முதல்கட்டமாக, மத்தியக் குழுவுக்கு அவா் தற்போது தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »