மஹிந்த ராஜபக்ச கிராமத்தில் இருந்து வந்த தலைவர். எனவே, அவர் கிராமங்களுக்கு வந்து மக்களை சந்திப்பதை போராட்டங்கள் நடத்தி தடுத்துவிடமுடியாது – என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் புத்தளம், ஆராச்சிக்கட்டுவ தொகுதிக் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
அத்துடன், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி வெற்றிநடைபோடும் எனவும், அதன் அரசியல் பயணத்தை வன்முறைமூலம் தடுக்க முடியாது எனவும் நாமல் சூளுரைத்தார்.