Our Feeds


Tuesday, October 25, 2022

Anonymous

பெட்ரோலுக்குள் மாத்திரையா? - மாத்திரை விவகாரத்தை மறுக்கிறது சிபெட்கோ

 



எரிபொருளின் ஒக்டேன் பெறுமதியை அதிகரிப்பதற்கும் கந்தகத்தின் அளவைக் குறைப்பதற்கும் எரிபொருளுடன் மாத்திரையைக் கலக்குமாறு, எந்தவொரு நிறுவனத்துக்கும் ஆலோசனையோ அல்லது அனுமதியோ வழங்கவில்லை என்று இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (சிபெட்கோ) தெரிவித்துள்ளது.


'ஈகோ டெப்லெட்' என்ற மாத்திரையை விளம்பரப்படுத்தி பொதுமக்களை தவறாக வழிநடத்தும் வகையில் குறிப்பிட்ட நிறுவனம் மோசடிப் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருவதாக கூட்டுத்தாபனம் விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அங்கிகரிக்கப்பட்ட ஆய்வு கூடத்தில் தரமான முறையின்படி பரிசோதனை செய்யாமல், உள்நாட்டு சந்தையில் டீசல் மற்றும் பெற்றோல் குறைந்த ஒக்டேன் காணப்படுவதாக, குறித்த நிறுவனம் வெளியிட்ட விளம்பரங்கள் குறித்து சட்ட நடவடிக்கை எடுக்குமாறு நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

பொய்யான பிரசாரங்களை நம்பி ஏமாற வேண்டாம் என்றும் மக்களிடம் கூட்டுத்தாபகனம் கோரிக்கை விடுத்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »