Our Feeds


Wednesday, October 26, 2022

Anonymous

4,000 பொலிஸாருக்கு உடல் தகுதி இல்லை: பொலிஸ்மா அதிபர் சந்தன விக்கிரமரத்ன அதிரடி

 



பொலிஸ் திணைக்களத்தில் சுமார் 4000 அதிகாரிகள், நீண்ட காலமாக தரமான சுகாதார நிலை இன்றி உள்ளதாக பொலிஸ்மா அதிபர் சந்தன விக்கிரமரத்ன தெரிவித்தார்.


பொது பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனைக் குழு கூட்டத்தில் மேற்குறிப்பிட்ட விடயத்தை அவர் அறிவித்தார்.

பல உத்தியோகத்தர்கள் மருத்துவ சான்றிதழ்களை சமர்ப்பித்ததை தொடர்ந்து கடினமான பணிகளில் ஈடுபடுவதில்லை எனவும் கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.

சுகாதார மட்டத்தில் இல்லாத பொலிஸ் உத்தியோகத்தர்கள் சேவையில் இருந்து நீக்கப்படுவார்கள் என்று பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் குறித்த கூட்டத்தில் குறிப்பிட்டார்.

இது தொடர்பான முன்மொழிவை அமைச்சுக்கு அனுப்பி வைக்குமாறு பொலிஸ்மா அதிபருக்கு அறிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »