Our Feeds


Sunday, October 23, 2022

Anonymous

10 MPக்களின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி பறிபோகும் சாத்தியம் - போட்டுடைத்த பாட்டலி ஷம்பிக்க!

 



அரசியலமைப்பின் 22வது திருத்தம் நிறைவேற்றப்பட்டதன் மூலம் இரட்டைக் பிரஜாவுரிமையுள்ள எவரும் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வகிக்க முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.


இதன்படி, பத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவிகள் இல்லாதொழிக்கப்படவுள்ளதால், பெயர் சொல்லி இராஜினாமா செய்யுமாறு அவர் கோரிக்கை விடுத்தார்.

அரசாங்கத்தில் உயர் பதவிகளை வகிக்கும் சில இரட்டைப் பிரஜாவுரிமை கொண்டவர்கள்  தீர்மானம் எடுப்பதற்கு இதுவொரு சந்தர்ப்பம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இரட்டைக் பிரஜாவுரிமையுடன் இலங்கையில் பணிபுரிபவர்கள் இப்போது ஒரு முடிவை எடுக்க வேண்டும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »