கல்கிஸை நீதிமன்ற வளாகத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்
சூட்டுச் சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்களை கைது செய்வதற்கு பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.இது தொடர்பில் மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
CCTV காட்சிகள் மற்றும் குற்றம் தொடர்பான ஏனைய ஆதாரங்களின் அடிப்படையில் துப்பாக்கிச் பிரயோகத்தை மேற்கொண்டுவிட்டு தப்பியோடிய சந்தேகநபர் மற்றும் அவருக்கு உதவிய சந்தேகநபரின் முகத்தை ஒத்திருக்கும் வகையில் பொலிஸார் இரண்டு படங்களை வெளியிட்டுள்ளனர்.
சம்பவத்திற்கு பிறகு அவர்கள் தப்பிச் சென்றதாக சந்தேகிக்கப்படும் காரின் புகைப்படம் மற்றும் சம்பவத்தின் சில வீடியோ காட்சிகளும் வெளியிடப்பட்டனர்.
குறித்த புகைப்படங்களில் உள்ள சந்தேக நபர்களைப் பற்றி ஏதேனும் தகவல் தெரிந்தால், 0112 717 516 என்ற தொலைபேசி இலக்கத்திலோ அல்லது 071 8591 664 என்ற தொலைபேசி இலக்கத்திலோ தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.