ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் மூன்றாம்
சார்ள்ஸ் மன்னருக்கும் இடையில் சிநேகபூர்வ உரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இங்கிலாந்து சென்றிருந்த போதே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
பக்கிங்ஹாம் அரண்மனையில் நடைபெற்ற சந்திப்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, மூன்றாம் சார்லஸ் மன்னரை சந்தித்தார்.
இந்நிகழ்வில் சிரேஷ்ட பேராசிரியர் மைத்திரி விக்கிரமசிங்கவும் கலந்துகொண்டார்.
இதேவேளை, மூன்றாம் சார்ள்ஸ் மன்னரை ஏனைய அரச தலைவர்களும் இதன்போது சந்தித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.