கொழும்பு - 02 இல் அமைந்துள்ள மர்யம் பெண்கள் பாடசாலையின் பழைய மாணவியர் சங்கம் சார்பில் நமது பாடசாலை நிலத்திலே நாமே பயிர்ச்செய்கை செய்து, காய்கறிகளை பறித்து நாமே சமைத்துக் கொடுக்க வேண்டும் என்ற தூர நோக்கின் கீழ் ஒரு சிறிய இடத்திலேயே, விசேஷமாக கொழும்பில் சன நெருக்கடியான இடங்களில் எப்படி மரம் செடி, கொடிகளை எப்படி வளர்ப்பது? என்பது பற்றிய மாணவர்களுக்கான தெளிவூட்டல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
மரம் நடுவதற்கோ, மரம் நடுகை தொடர்பில் அறிந்து, கற்றுக்கொள்வதற்கோ இடவசதியற்றி கொழும்பு வாழ் மாணவர்களை இலக்கு வைத்தே இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
மாணவர்கள் உட்சாகமாக கலந்துகொண்ட நிகழ்ச்சிக்கு அரச அதிகாரிகள் தமது முழ ஒத்துழைப்புகளை தந்து ஊக்குவித்தமை குறிப்பிடத் தக்கதாகும்.