Our Feeds


Thursday, September 8, 2022

Anonymous

BREAKING: 13ம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவுக்கு உத்தரவு



ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கட்சி தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவுக்கு நீதிமன்றம் அறிவிப்பு விடுத்துள்ளது.


அதற்கமைய, எதிர்வரும் 13ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் விடுத்துள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, இரு மனுக்களையும் எதிர்வரும் 13ஆம் திகதி மீள பரிசீலனைக்கு உட்படுத்துவதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

சட்டத்தரணிகளான விஜித குமார மற்றும் பிரியலால் சிறிசேன ஆகியோரால் இந்த இரண்டு மனுக்களும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »