ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம் மற்றும் பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரனான “ரோஹா”வின் நெருங்கிய உறவினர் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
விசேட அதிரடிப்படை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம், ஹொரணை – பல்லாபிட்டிய, சீலரத்ன அசபுவ பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர் நேற்று (19) கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரதான சந்தேக நபருடன் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்கள் போதைப்பொருள் கொள்வனவுக்காக அங்கு சென்றதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
பிரதான சந்தேக நபர் ஹொரண பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.
சந்தேக நபர் கைது செய்யப்பட்ட போது, 6 கிராம் 800 மில்லிகிராம் ஹெரோயினும் கைப்பற்றப்பட்டது.