தற்போதுள்ள ஊழியர் வெற்றிடங்கள் காரணமாக எதிர்காலத்தில் பல புகையிரத சேவைகளை இரத்துச் செய்ய நேரிடும் என புகையிரத போக்குவரத்து அத்தியட்சகர் காமினி செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
60 வயதில் கட்டாய ஓய்வு பெறுவதால், புகையிரத திணைக்களத்தில் ஏராளமானோர் ஓய்வு பெறவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் சுமார் 50 வீதமானோர் ஓய்வு பெறப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.