தனியார் மற்றும் அரச துறைகளில் இனங்காணப்பட்டுள்ள சில விசேட பிரிவினருக்கான எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிப்பதற்கு முயற்சிகள் எடுக்கப்படும் என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
ட்விட்டர் பதிவொன்றை வெளியிட்டு அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பயண எரிபொருள் அனுமதி மற்றும் வாகனம் அல்லாத வகைகளுக்கு அடுத்த வாரம் முதல் QR முறை அறிமுகப்படுத்தப்படும் எனவும் எரிசக்தி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.