Our Feeds


Sunday, September 18, 2022

SHAHNI RAMEES

நாவலப்பிட்டி மேயரை தாக்கி துப்பாக்கி, பணத்தை கொள்ளையிட்டவர் கைது!

 


நாவலப்பிட்டி மாநகர சபைமேயர் அமல் பிரியங்கர பயணித்த கெப் வண்டியையும் மேயர் மற்றும் அவரது சாரதியை தாக்கி கைத்துப்பாக்கி மற்றும் 5 இலட்சம் ரூபா பணத்தையும் கொள்ளையிட்ட சந்தேகத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்



மே-9 இல் இடம்பெற்ற சம்பவங்களின்போதே மேயர் மீது தாக்குதல் நடத்தப்பட்டு துப்பாக்கியும் பணமும் கொள்ளையிடப்பட்டன.

சந்தேகநபர் நேற்று (17) தலவத்துகொட பிரதேசத்தில் கவச காரில் பயணித்த போது தலங்கம பொலிஸ் அதிகாரிகள் குழுவினால் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தெற்கு தலங்கம பிரதேசத்தை சேர்ந்த 29 வயதுடையவராவார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »