திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் ஒன்றில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டொன்றை எடுத்துக் கொண்டு குற்றச் செயல்களில் ஈடுபடச் செனறார் எனக் கூறப்படும் ஒருவர் ஹோகந்தர பிரதேசத்தில் கைது செய்யப்பட்டதாக மாலம்பே பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் துபாயில் பதுங்கியிருக்கும் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான லடியாவின் நெருங்கிய சகா என்று பொலிஸார் தெரிவித்தனர்.
ஹோகந்தர பிரதேசத்தின் ராமநாயக்க மாவத்தையில் உள்ள வீடொன்றுக்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதனையடுத்து குறித்த மோட்டார் சைக்கிள் ஹோகந்தர பிரதேசத்தில் செல்வதை அவதானித்த பின்னர் அதனைப் பின்தொடர்ந்த பொலிஸார் மோட்டார் சைக்கிளை நிறுத்தி அதில் பயணித்த நபரை கைது செய்துள்ளனர். இதன்போதே அவரிடமிருந்து கைக்குண்டு ஒன்றும் கைப்பற்றப்பட்டது.