Our Feeds


Wednesday, September 28, 2022

SHAHNI RAMEES

பெற்றோரை தாக்கியதில் தந்தை உயிரிழப்பு: சடலத்தை தீயிட்டுக் கொளுத்திய மகன்: ஹோகந்தரையில் சம்பவம்!



ஹோகந்தரையில் தனது பெற்றோரை மகன் தாக்கியதில்

தந்தை உயிரிழந்துள்ளதுடன் தாய் பலத்த காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சந்தேக நபரான மகன் தனது பெற்றோரை மண்வெட்டி மற்றும் கத்தியால் தாக்கியுள்ளதாக மாலபே பொலிஸார் பொலிஸார் தெரிவித்தனர்.


தாக்குதலின் பின்னர் சந்தேகநபர் தனது தந்தையின் சடலத்தை தீயிட்டுக் கொளுத்தியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


ரஞ்சித் சேனாரத்ன என்ற 57 வயதான முச்சக்கர வண்டி சாரதியே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.


போதைப்பொருளுக்கு அடிமையாகி புனர்வாழ்வளிக்கப்பட்டிருந்த மகனை அண்மையில் தாய் வீட்டுக்கு அழைத்து வந்துள்ள நிலையிலேயெ இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரான 28 வயதுடைய மகனைக் கைது செய்ய மாலபே பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »