முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, தமது எதிர்கால திட்டங்கள் குறித்து இதுவரை தீர்மானிக்கவில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் இதனைக் குறிப்பிட்டார்.
நாட்டை விட்டு கடந்த ஜுலை 13ம் திகதி சென்ற கோட்டாபய ராஜபக்ஸ, நேற்றிரவு 11.47 க்கு நாட்டை வந்தடைந்தார்.
இவ்வாறு நாட்டை வந்தடைந்த கோட்டாபய ராஜபக்ஸவை வரவேற்பதற்கு, அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் என பலரும் சென்றிருந்தனர்.
இதையடுத்தே, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.