Our Feeds


Monday, September 19, 2022

SHAHNI RAMEES

கொழும்பு தெமட்டகொடயில் கொள்ளைச் சம்பவங்கள்: சந்தேகநபர் ஒருவர் கைது


 கொழும்பு தெமட்டகொட பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஆராயமிய வீதியில் இடம்பெற்ற பல கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் நேற்று (18) கைது செய்யப்பட்டுள்ளதாக தெமட்டகொட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.




சந்தேக நபரின் வீட்டை சோதனையிட்டபோது அவரால் கொள்ளையிடப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 125 கையடயக்கத்தொலைபேசிகள், 10 மடிக்கணினிகள், இசைக்கருவிகள், 520 கைக்கடிகாரங்கள் , 3 தொலைக்காட்சிகள் என்பனவற்றுடன் கைக்குண்டு ஒன்றையும் மீட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளார்கள்.


தெமட்டகொட பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய சந்தேக நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். தெமட்டகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்கள்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »