Our Feeds


Wednesday, September 21, 2022

SHAHNI RAMEES

தம்பதியினர் பயணித்த காரை மோதிய ரயில்: களனிவெளி ரயில் மார்க்கத்தில் சம்பவம்!


 களனிவெளி ரயில் மார்க்கத்தில் பகிரிவத்தை மற்றும் தெல்கந்த ரயில் நிலையத்துக்கு அருகில் இன்று (21) காலை விபத்து இடம்பெற்றுள்ளது.


தம்பதியினரை ஏற்றிச் சென்ற காரை ரயில் மோதியே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக மிரிஹான தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் காரில் பயணித்த பெண் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


பகிரிவத்த ரயில் நிலையத்துக்கு அருகில் வசிக்கும் குறித்த தம்பதியினர் இன்று (21)  அதிகாலை திம்புலாகல பகுதிக்கு செல்வதற்காக வீட்டை விட்டு வெளியேறிய போதே இந்த விபத்துக்கு முகம் கொடுத்துள்ளனர்.


அவிசாவளையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலே பங்கிரிவத்த ரயில் கடவைக்கு அருகில் காரை மோதியுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »