” சஜித் பிரேமதாச உட்பட கட்சியில் இருந்து வெளியேறியோர் மீண்டும் தாய்வீடு திரும்பலாம். அதற்கு எவ்வித தடையும் இல்லை.”
இவ்வாறு ஐ.தே.க.வின் சிரேஷ்ட உறுப்பினரும், ஜனாதிபதியின் பாதுகாப்பு விவகார ஆலோசகருமான சாகல ரத்னாயக்க தெரிவித்தார்.
” எமது கதவுகள் எப்போதும் திறந்தே உள்ளன. பிரிந்து சென்றவர்கள் யாராக இருந்தாலும் தாய்க் கட்சியுடன் இணைந்து கொள்வதில் தடையே இல்லை. ஆனால் நாங்கள் எந்தக் கட்சியில் இருந்தும் உறுப்பினர்களை கவர்ந்து இழுக்க மாட்டோம்.விரும்பியோர் வரலாம் என்பதே எமது கொள்கை.” – எனவும் அவர் குறிப்பிட்டார்.