தேசிய பேரவை யோசனைக்கு தமது கட்சி ஆதரவளிக்காது
என தேசிய மக்கள் சக்தியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க, இன்று (20) நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.தேசிய பேரவை என்ற நாடாளுமன்ற குழுவை நிறுவுவதற்கான யோசனை பிரதமர் தினேஸ் குணவர்தனவினால், சபையில் முன்வைக்கப்பட்டு, விவாதிக்கப்பட்டு வருகின்றது.
பின்னர், இது தொடர்பான விவாதம் ஆரம்பிக்கப்பட்டதுடன், இந்த பிரேரணை உடன்படிக்கைகளுக்கு அமைய செயற்படாத காரணத்தினால் தமது கட்சி இதற்கு ஆதரவளிக்காது என தேசிய மக்கள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
இதேவேளை, இந்த பிரேரணைக்கு தமது குழுவும் ஆதரவளிக்காது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சுயேட்சை அணி உறுப்பினரான நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெருமவும் தெரிவித்துள்ளார்.