சுமார் 18 இலட்சம் ரூபா பெறுமதியான வெடிபொருட்களை அனுமதிப்பத்திரம் இன்றி கெப் வண்டியில் ஏற்றிச் சென்றார் என்ற சந்தேகத்தில் ஒருவரை தொம்பே பனன்வல விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர் தொடர்பில் கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது 25 கிலோ அமோனியா நைட்ரேட் கைப்பற்றப்பட்டதாக விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர். சந்தேகநபரிடமிருந்து 5 இலட்சம் ரூபா பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேக நபர் தொம்பே பிரதேசத்தை சேர்ந்த 41 வயதுடையவர் என்பதுடன் மேலதிக விசாரணைகளுக்காக தொம்பே பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.