Our Feeds


Wednesday, September 21, 2022

SHAHNI RAMEES

ஜப்பான் பிரதமர் அலுவலகத்திற்கு முன்பாக ஒருவர் தீக்குளிக்க முயற்சி


 ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேக்கு அரசு சார்பில் இறுதி மரியாதை செலுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஒருவர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றது அந்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஜப்பானில் நீண்ட காலம் பிரதமராக பணியாற்றிய அபே, கடந்த ஜூலை மாதம் 8 ஆம் திகதி பிரசாரத்தின் போது சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.


அவருக்கு எதிர்வரும் 27ஆம் திகதி அரசு சார்பில் இறுதி மரியாதை நடத்தப்படவுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, டோக்கியோவில் உள்ள பிரதமர் அலுவலகம் அருகே ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். அவரை காப்பாற்ற முயன்ற பொலிஸ் அதிகாரி காயமடைந்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »