எதிர்வரும் எந்தவொரு தேர்தலிலும் மேலவை இலங்கை கூட்டணியில் போட்டியிடவுள்ளதாக அதன் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற மேலவை இலங்கை கூட்டணியின் முதலாவது நிறைவேற்று சபைக்கூட்டத்தில் கலந்துகொண்டு அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சு பதவிகளை ஏற்பதற்கு தாம் தயாரில்லை எனவும், சர்வ கட்சி அரசாங்கம் ஒன்று அமையும் பட்சத்திலேயே அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.