9 சுயாதீன கட்சிகள் இணைந்து எதிர்வரும் நான்காம் திகதி கட்டியெழுப்பவுள்ள புதிய கூட்டணியில் இணையுமாறு சகலருக்கும் அழைப்பு விடுப்பதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துவெளியிட்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அமையப்பெறவுள்ள புதிய கூட்டணி ஊடாக மக்களின் பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக் கொடுக்கவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.