Our Feeds


Monday, September 19, 2022

SHAHNI RAMEES

தாமரை கோபுரத்தை பார்வையிடச் செல்வோருக்கான அறிவிப்பு..!




தாமரை கோபுரம் கடந்த 15 ஆம் திகதி முதல் மக்கள் பாவனைக்கு

திறந்து வைக்கப்பட்டது.


இதன்மூலம், முதல் 3 நாட்களில் 75 இலட்சம் ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


அந்தக் காலப்பகுதியில் சுமார் 14,000 பேர் கோபுரத்தை பார்வையிட்டுள்ளதாக கொழும்பு, தாமரைக் கோபுரம் தனியார் நிறுவனத்தின்பிரதம நிர்வாக அதிகாரி ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார்.


இதேவேளை, தாமரை கோபுரத்தை பார்வையிடுவதற்கு மக்களுக்கு வழங்கப்பட்டிருந்த கால அவகாசமும் சனிக்கிழமை (17) முதல் நீடிக்கப்பட்டுள்ளது.


அதன்படி, மதியம் 12.00 மணி முதல் இரவு 11.00 மணி வரை பார்வையிடலாம்.


எவ்வாறாயினும், இரவு 10:00 மணி வரை மட்டுமே பயணச்சீட்டுகள் வழங்கப்படும் என ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »