முன்னாள் நிதி அமைச்சர் பெசில் ராஜபக்ஷ 2023 ஜனவரி 15 ஆம் திகதி வரை வெளிநாடு செல்வதற்கு உயர் நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியது.
மருத்துவ சிகிச்சைக்காக அடுத்த வாரம் வெளிநாடு செல்வதற்கு பெசில் ராஜபக்ஷ எதிர்பார்ப்பதாக அவரின் சட்டத்தரணி தெரிவித்து, பெசில் வெளிநாடு செல்வதற்கு அனுமதி வழங்குமாறு கோரிக்கை விடுத்தார்.
அதையடுத்து 5 நீதியரசர்கள் கொண்ட குழாம் இந்த அனுமதியை வழங்கியது.
தவறான பொருளாதார கொள்கைளால் நாடு வங்குரோத்து நிலைமைக்கு தள்ளப்பட்டதாக தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் மனு உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தபோதே, பெசில் ராஜபக்ஷ எதிர வெளிநாடு செல்வதற்கு அனுமதி கோரப்பட்டது.
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, மத்திய வங்கி முன்னாள் ஆளுநர்கள் அஜித் கெப்ரால், டபிள்யூ.டி. லக்ஷ்மன், முன்னாள் அமைச்சர்கள் பெசில் ராஜபக்ஷ, அலி சப்றி, முன்னாள் நிதியமைச்சர் எஸ்.ஆர்.ஆட்டிகல உட்பட 45 பேர் மேற்படி அடிப்படை உரிமை மனுவில பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.