Our Feeds


Friday, September 23, 2022

Anonymous

தொல்பொருள் திணைக்களம் இனவாத திணைக்களமாக செயற்படுகிறது! - சுமந்திரன் குற்றச்சாட்டு!



(இராஜதுரை ஹஷான்,எம்.ஆர்.எம்.வசீம்)


குருந்தூர்மலையில் நீதிமன்ற கட்டளையை மீறியவர்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்து நீதியை பாதுகாக்க முற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். தொல்பொருள் திணைக்களம் இனவாத திணைக்களமாக தமிழ் மக்களுக்கு எதிராக செயற்படுகிறது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் குற்றம்சாட்டினார்.

நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை இடம்பெற்ற இலங்கை தொலைக்காட்சி கூட்டுத்தாபன திருத்த சட்டமூல விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும்கூறுகையில் , குருந்தூர் மலையில் எங்களத கட்சி உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். தொல்பொருள் திணைக்களம் சட்டவிரோதமாக அங்கு கட்டிடங்களைக் கட்டுவதை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

தொல்லியல் திணைக்களம் இப்படியாக எங்களுடைய மக்களின் நிலங்களை மிக மோசமான முறையிலே அபகரிக்கின்ற திட்டங்கள் சம்பந்தமாக பல தடவை பாராளுமன்றத்திலும் வெளியிலும் பேசியிருக்கிறோம். 600க்கு மேற்பட்ட ஏக்கர் வயல் காணிகளை அபகரிக்கமு் இந்த முயற்சி தடுக்கப்பட வேண்டும் என்று அவர்கள் செய்த ஆர்ப்பாட்டத்துக்கு பிரதிபலனாக அவர்கள் கைது செய்யப்படுகின்றார்கள் இது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »